››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பொதுமன்னிப்புக் காலத்தின் சாதகமான பெறுபேறுகள்

பொதுமன்னிப்புக் காலத்தின் சாதகமான பெறுபேறுகள்

[2017/01/03]

சுமார் ஒன்பதாயிரம் படை வீரர்கள் சட்ட ரீதியாக விலகல்

உத்தியோக பூர்வ விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படையினருக்கு வழங்கப்பட்ட சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் டிசம்பர் மாதம் 31ஆம்திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. குறித்த ஒரு மாத கால பொதுமன்னிப்பு அறிவிப்பானது டிசம்பர்.01ம் திகதி அமுல்படுத்தப்பட்ட அதேவேளை, சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுக் கொள்வதற்கான முதலாவது பொதுமன்னிப்பு கால அவகாசம் கடந்த வருடம் ஜூன் 13ம் திகதி தொடக்கம் ஜூலை 12ம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த்து.

மேலும், பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை உத்தியோக பூர்வ விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத சுமார் 9000 முப்படையின் வீரர்கள் சட்டரீதியாக சேவைவிலக்கு பெற்றுக் கொள்வதற்கான அனுமதியினை பெற்றுள்ளனர். குறித்த இக்காலத்தினை பயன்படுத்தி இலங்கை இராணுவத்திலிருந்து 11 அதிகாரிகள் மற்றும் 7812 இராணுவ வீரர்களும், விமானப்படையிலிருந்து 21 அதிகாரிகள் மற்றும் 312 விமானப்படை வீரர்களும், கடற்படையிலிருந்து 2 அதிகாரிகள் மற்றும் 709 கடற்படை வீரர்கள் ஆகியோர் சட்ட ரீதியாக விலகிச் செல்லவதற்கான அனுமதியினை பெற்றுக் கொண்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மையத்தின் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன அவர்கள் தெரிவத்துள்ளார்.

குறித்த இக்காலப் பகுதியை பயன்படுத்தி சட்ட ரீதியாக விலகிச் செல்லாதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாட்டை விட்டுச் செல்வதற்கு தடைவிதிக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த இவ் வீரர்களினால் வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதுடன் இவர்களுக்கு தொழில் வழங்குவதும் சட்டவிரோதச் செயலாக கருதப்படுகின்றது. இதேவேளை, குறித்த இப்பொது மன்னிப்பு காலம் தங்களது படைப்பிரிவின் சேவையிலிருந்து சட்ட ரீதியக விலகிச் செல்ல அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
 

தொடர்பான செய்திகள் >>

பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு

பொது மன்னிப்பு கால எல்லைக்குள் முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற மேலும் பலர் சட்ட ரீதியாக விலக முறையீட

பொதுமன்னிப்பு காலம் சாதகமான நிலையில்

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு

இராணுவத்திலிருந்த தப்பியோருக்கு பொது மன்னிப்பு



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்