முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 1200 பேர் கைது
[2017/02/13]
அனுமதியற்ற நீண்டகால விடுமுறையிலுள்ள முப்படைகளைச்
சேர்ந்த வீரர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தற்போது நாடுபூராகவும்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நடவடிக்கைகளில் இராணுவ பொலிசாருடன்
இணைந்து இலங்கை பொலிஸ் திணைக்கள அதிகாரிகளும் ஈடுபட்டுவருகின்றனர்.
குறித்த இக்கைது நடவடிக்கைகள் மூலம் இதுவரை (டிசம்பர் 31
முதல் பெப்ரவரி 13 வரை) சுமார் 1300 முப்படை வீரர்கள் கைது
செய்யப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன
தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 984 இராணுவ தரைப்படை
வீரர்கள், 236 கடற்படைவீரர்கள், 14 விமானப்படை வீரர்கள் ஆகியோர்
உள்ளடங்குகின்றதாகவும் மேலும் முப்பட்டையிலிருந்து தப்பிச்சென்ற சுமார்
42,800 வீரர்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக தமது கடமைகளில் இருந்து விடுவிப்பு
பெறவில்லை எனவும் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள்
எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முப்படை வீரர்களுக்கு சட்டரீதியாக கடமையிலிருந்து
விலகுவதற்காக கடந்த ஆண்டு இரு முறைகள் பொதுமன்னிப்புக்காலம் அறிவிக்கப்பட்டு
கால அவகாசம் வழங்கப்பட்டது. அவ்வாண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட
பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி 34 அதிகாரிகள் மற்றும்
8843படைவீரர்கள் சட்டரீதியாக விலகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்திகள் >>
|