“ரணவிரு விஷேட அடையாள அட்டை” முன்னேற்றச் செயற்பாடுகள் தொடர்பான
கலந்துரையாடல்
“ரணவிரு விஷேட அடையாள அட்டை“ வேலைத்திட்டத்தின்
முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் நிகழ்வு பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சின் செயலாளர் ஏ. பி. ஜி கித்சிறி அவர்களின் தலைமையில் நேற்று
(பெப்ரவரி.17) நடைபெற்றது.
மேலும், இச்செயற்றிட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களின் தூரநோக்கு சிந்தனையின் கீழ் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம்
திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலின்போது “ரணவிரு விஷேட அடையாள அட்டையின் இரண்டாம் கட்டத்தின்
செயற்பாடு பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன் மாகாண மட்டத்திலிருந்து மாவட்ட
மட்டத்திற்கு அறிமுகப்படுத்தல் தொடர்பாகவும்
கலந்துரையாடப்பட்டது.இதேவேளை,அனுசரணையாளர்களின் விடயங்கள், அனுராதபுரம்,
குருநாகல், கொழும்பு, குருவிட்ட மற்றும் அம்பேபுஸ்ஸ ஆகிய பிரதேசங்களுக்கு
விஷேட அடையாள அட்டைகள் வினியோகித்தல், படையணி ஊடாக அட்டைகள்
வினியோகித்தல்,ஊடகபிரச்சாரம்,வெளியீட்டு விழாவின்போது அடையாளப்பூர்வமாக
வினியோகிக்கப்பட்ட அட்டைகளுக்கு அசல் அட்டைகள் விநியோகித்தல் ஆகியனவும்
கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வின்போது ரணவிரு சேவா
திணைக்களத்தின் தலைவி திருமதி. அனோமா பொன்சேக, அமைச்சின் அதிகாரிகள்,
இராணுவ, கடற்படை,விமானப்படை,பொலிஸ், சிவில் பாதுகாப்புபடை, ரணவிரு சேவா
திணைக்கள மற்றும் மொபிடல் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
http://www.virusara.gov.lk
எனும் இணைத்தள முகவரியூடாக அனுகமுடியும்.
|