‘விருசரா‘ வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்
இடம்பெற்றது
முப்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும்
பல்வேறு வரப்பிரசாதங்களை வழங்கும் ‘விருசரா‘ ரணவிரு விஷேட அடையாள அட்டை
வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் நிகழ்வு
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஏபிஜி. கித்சிரி அவர்களின்
தலைமையில் நேற்று (மார்ச்,09) நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, ‘விருசரா‘ ரணவிரு விஷேட அடையாள
அட்டையின் தற்போதய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் பயனாளர்களுக்கு
வினியோகித்தல் ஆகியன கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின்போது ரணவிரு சேவா திணைக்களத்தின் தலைவி
திருமதி. அனோமா பொன்சேக, அமைச்சின் அதிகாரிகள், இராணுவ,
கடற்படை,விமானப்படை,பொலிஸ், சிவில் பாதுகாப்புபடை, ரணவிரு சேவா திணைக்கள
பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
“‘விருசர” தொடர்பான செய்திகள் >>
|