››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

[2017/07/28]

அனுமதியின்றி நீண்டகால விடுமுறையிலிருந்து கடமைக்கு சமூகமளிக்காத முப்படை வீரர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதனடிப்படையில் இதுவரை சுமார் நான்காயிரத்து ஐநூறு படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி நள்ளிரவுடன் முடிவுற்ற பொதுமன்னிப்பு காலத்திலிருந்து நேற்றைய தினம் வரை (ஜுலை, 27) 08 அதிகாரிகள் மற்றும் 4410 படை சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இராணுவத்தின் 08 அதிகாரிகள் 3529 இராணுவ சிப்பாய்கள், கடற்படையின் 805 கடற்படை சிப்பாய்கள் மற்றும் விமானப்படையின் 76 விமானப்படை சிப்பாய்கள் உள்ளடங்குகின்றனர்.

பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச் செல்லாத படைவீரர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் இராணுவ பொலிசாருடன் இணைந்து காவல்துறையினரும் ஈடுபட்டுவருகின்றனர்.

அனுமதியின்றி நீண்டகால விடுமுறையிலிருந்து கடமைக்கு சமூகமளிக்காத முப்படை வீரர்களுக்கு சட்டரீதியாக கடமையிலிருந்து விலகுவதற்காக கடந்த ஆண்டு இரு முறைகள் பொதுமன்னிப்புக்காலம் அறிவிக்கப்பட்டு கால அவகாசம் வழங்கப்பட்டது. குறித்த பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி 34 அதிகாரிகள் மற்றும் 8843 படை சிப்பாய்கள் ஆகியோர் சட்டரீதியாக விலகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள் >>

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற வீரர்கள் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 1200 பேர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 450 பேர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு

பொது மன்னிப்பு கால எல்லைக்குள் முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற மேலும் பலர் சட்ட ரீதியாக விலக முறையீட

பொதுமன்னிப்பு காலம் சாதகமான நிலையில்

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு

இராணுவத்திலிருந்த தப்பியோருக்கு பொது மன்னிப்பு



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்