இலங்கை கடற்பரப்பில் விரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது
[2017/06/25]
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி சட்ட விரோத மீன்பிடியில்
ஈடுபட்ட மேலும் எட்டு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று (ஜூன்,
24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானப்படை மருத்துவக்குழு உதவி
[2017/06/23]
அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணாமாக
பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார நலன் கருதி இலங்கை விமானபடையின்
மருத்துவகுழு இரு மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்ததது.
தாய்லாந்தில் இராணுவ விளையாட்டு வீர வீராங்கனைகள் சாதனை
[2017/06/23]
இலங்கை இராணுவ விளையாட்டு வீர வீராங்கனைகள் பெங்கொக்
நகரில் இடம்பெற்ற “2017ஆம் ஆண்டிற்கான தாய்லாந்து ஓபன் டிராக் மற்றும்
பீல்ட் சாம்பியன்ஷிப்” போட்டியில் கலந்துகொண்டு பல நாடுகளை தோற்கடித்து
400மீட்டார் போட்டியில் தங்கப்பதக்கம் உட்பட மேலும் பல பதக்கங்களை வெற்றி
கொண்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டம் கண்ணிவெடியற்ற மாவட்டமாக பிரகடனம்
[2017/06/22]
கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு அபாய சமிஞ்சை
விடுக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தை கண்ணிவெடியற்ற மாவட்டமாக
கண்ணிவெடியகற்றும் பிரிவினரால் பிரகடனப் படுத்தப்படும் நிகழ்வு நேற்று
(ஜுன்,21) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதாக இராணுவ தகவல்கள்
தெரிவிக்கின்றன.
கடற்படையினரால் யாழ் வைத்திய சாலைக்கு 100 கற்றாக்ட் லென்ஸ்கள்
அன்பளிப்பு
[2017/06/22]
இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு அமைவாக யாழ் போதனா
வைத்தியசாலைக்கு கற்றாக்ட் லென்ஸ்கள் எனப்படும் பார்வை வில்லைகள் நூறினை
(100) இலங்கை கடற்படையினர் அண்மையில் (ஜுன்,19 ) நடைபெற்ற நிகழ்வொன்றின்
போது அன்பளிப்பு செய்தனர.
உயிரிழந்த படை வீரர்களின் குடும்பங்கள் மற்றும் அங்கவீனமுற்ற
படைவீரர்கள் ஆகியோருக்கு வட்டியில்லா கடனுதவி
[2017/06/21]
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன
மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி
ஆகியோரின் தலைமையில் போரின்போது உயிரிழந்த படைவீரர்களின் குடும்பங்கள்
மற்றும் அங்கவீனமுற்ற படைவீரகளுக்கு வட்டியில்லா வீடமைப்பு கடனுதவியளிக்கும்
நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜூன்,21) இடம்பெற்றது.
யாழ் பகுதியில் இலங்கை கடற்படையினரின் மருத்துவ முகாம்
[2017/06/21]
இலங்கை கடற்படையினரால் அண்மையில் (ஜூன், 18) யாழ்பானம்
அனலைதீவுப்பகுதியில் மருத்துவ முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த
இம்மருத்துவ முகாமில் இப்பகுதியில் புதிதாக குடியமர்த்தப்பட்ட சுமார் 230
குடும்பங்களை சேர்ந்த அதிகளவிலான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது
மருத்துவ தேவைகளுக்கான சிகிச்சைகளை பெற்றுக்கொண்டனர்.