››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகிச் செல்வதற்கான பொதுமண்ணிப்பு காலம் அறிவிப்பு

இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகிச் செல்வதற்கான பொதுமண்ணிப்பு காலம் அறிவிப்பு

[2017/10/19]

இலங்கை இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகிச் செல்வதற்கான பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பு பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (ஒக்டோபர்,19) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது வெளியிடப்பட்டது.

மேலும், இப் பொதுமன்னிப்பு காலம் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

இலங்கை இராணுவத்தின் 68வது ஆண்டு நிறைவையொட்டி இவ்விஷேட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இராணுவத்திலிருந்து சட்டவிரோதமாக தப்பிச்சென்ற இராணுவ வீரர்கள் தமது படைப் பிரிவுகளின் தலைமையாகங்களுக்கு விஜயம் செய்து உரிய ஆவணங்களை சமர்பித்து சட்டபூர்வமாக விலகிச் செல்ல முடியும். எனினும், இலங்கை இராணுவத்தின் மருத்துவ சேவை படைப்பிரிவிலிருந்து சட்டவிரோதமாக தப்பிச்சென்ற இராணுவ வீரர்கள் இப்பொதுமண்ணிப்புக் காலத்தை பயன்படுத்தி சட்டபூர்வமாக விலகிச் செல்ல முடியாது.

பாதுகாப்பு அமைச்சினால் 2016ஆம் ஆண்டு இரு தடவைகள் இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகிச் செல்வதற்கான பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்த பொதுமன்னிப்பு காலவேளையின் போது முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற சுமார் 34 படை அதிகாரிகள் மற்றும் 8843 சிப்பாய்கள் உள்ளிட்ட 8877 படைவீரர்கள் உத்தியோகபூர்வமாக சேவையிலிருந்து விலகிச் சென்றனர். இக்காலத்தில் சட்டபூர்வமாக விலகிச் செல்லாதவர்களை கைது செய்யும் நடவடிக்கைள் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இராணுவ ஆளணி பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா, இராணுவ பேச்சாளரும் இராணுவ தலைமையாகத்தின் ஊடக பணியகத்தின் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன ஆகியோர் உள்ளிட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்பான செய்திகள் >>

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற படைவீரர்கள் 777 பேர் ஒரே நாளில் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற வீரர்கள் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 1200 பேர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 450 பேர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு

பொது மன்னிப்பு கால எல்லைக்குள் முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற மேலும் பலர் சட்ட ரீதியாக விலக முறையீட

பொதுமன்னிப்பு காலம் சாதகமான நிலையில்

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு

இராணுவத்திலிருந்த தப்பியோருக்கு பொது மன்னிப்பு

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்