‘விருசர’ வரப்பிரசாத அட்டையின் முன்னேற்ற செயற்பாடுகள் குறித்து
ஆராயும் விஷேட கலந்துரையாடல்
[2016/05/31]
‘விருசர’ வரப்பிரசாத அட்டை வேலைத்திட்டத்தின் முன்னேற்றம்
தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் நிகழ்வு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின்
செயலாளர் திரு. ஏபிஜி. கித்சிரி அவர்களின் தலைமையில் நேற்று மாலை (மே, 30 )
நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் ‘விருசர’ வரப்பிரசாத அட்டையின்
தற்போதய முன்னேற்றம் மற்றும் பயனாளர்கள் ,சேவைவழங்குனர்கள் ஆகியோரிடமிருந்து
பெறப்படும் கருத்துக்கள், பின்னூட்டல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் ரணவிரு சேவா திணைக்களத்தின் தலைவி,
பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், முப்படை,பொலிஸ், சிவில் பாதுகாப்புபடை
அதகாரிகள், ரணவிரு சேவா திணைக்கள பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்
‘விருசர’ வரப்பிரசாத அட்டை வேலைத்திட்டமானது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களினால் செயற்படுத்தப் பட்டுவரும் திட்டங்களில்
மகத்துவமிக்க ஒன்றாகும். இத்திட்டம் தாய் நாட்டிற்காக பல்வேறு தியாகங்களைப்
புரிந்த படையினருக்கான நிலையான சேமலாப நலன்களை கருத்தில் கொண்டு
உருவாக்கப்பட்டது. யுத்தத்தில் பங்கெடுத்த படை வீரர்கள் பலர் இத்திட்டத்தின்
பலாபலன்களை தற்போது அனுபவித்து கொண்டு வருகின்றனர். அவர்கள் சுமார்
நாற்பதிற்கு மேற்பட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலமாக இந்த
வரப்பிரசாத அட்டையை பயன்படுத்தி சிறந்த சேவைகளை பெற்று வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
“‘விருசர” தொடர்பான
செய்திகள் >>
|