‘விருசர’ வரப்பிரசாத அட்டை இரண்டாம் கட்டத்தின் முன்னேற்ற செயற்பாடுகள்
குறித்து ஆராயும் விஷேட கலந்துரையாடல்
[2016/06/14]
‘விருசர’ வரப்பிரசாத அட்டை வேலைத்திட்டத்தின் இரண்டாம்
கட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் நிகழ்வு பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஏபிஜி. கித்சிரி அவர்களின் தலைமையில்
நேற்று மாலை (ஜுன், 13 ) நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் ‘விருசர’ வரப்பிரசாத அட்டையின் தற்போதய முன்னேற்றம்
மற்றும் பயனாளர்கள் ,சேவைவழங்குனர்கள் ஆகியோரிடமிருந்து பெறப்படும்
கருத்துக்கள், சேவை நலன்களை அதிகரித்தல் என்பன தொடர்பில்
கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் ரணவிரு சேவா திணைக்களத்தின் தலைவி,
பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், முப்படை,பொலிஸ், சிவில் பாதுகாப்புபடை
அதகாரிகள், ரணவிரு சேவா திணைக்கள பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்
‘விருசர’ வரப்பிரசாத அட்டை வேலைத்திட்டமானது தாய்
நாட்டிற்காக பல்வேறு தியாகங்களைப் புரிந்த படையினருக்கான நிலையான சேமலாப
நலன்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன்
விஜேவர்தன அவர்களினால் செயற்படுத்தப் பட்டுவரும் திட்டங்களில் ஒன்றாகும்.
சுமார் 48 அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் இணைந்துள்ள இத்திட்டத்தம்
ரணவிரு சேவா அதிகாரசபையினால் செயற்படுத்தப்பட்டுவருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு கீழ் வரும் இணைப்பினை கிளிக் செய்க
http://virusara.gov.lk/ta/
“‘விருசர” தொடர்பான
செய்திகள் >>
|