நிவாரணப் பொருட்களுடன் மூன்று சீன இராணுவ கடற்படைக் கப்பல்கள் இலங்கை
வருகை
[2017/06/01]

சீன இராணுவ கடற்படைக்குச் சொந்தமான “சாங் சுன்”,”ஜிங்
சௌ”, “சஓ ஹு” ஆகிய கப்பல்கள் நிவாரணப் பொருட்கள் சகிதம் நேற்று (மே, 31)
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. குறித்த இக்கப்பல்கள் வெள்ளத்தினால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளுக்கு மேலும் உதவியளிக்கும் வகையில்
இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இம் மூன்று கப்பல்களும் இலங்கைக்கு நல்லெண்ண
விஜயத்தினை மேற்கொள்ள தீர்மானித்திருந்ததாகவும் எனினும் நாட்டில் நிலவும்
அசாதாரண நிலை காரணமாக தனது விஜயத்தினை பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நிவாரணமளிக்கும் விஜயமாக மாற்றிக்கொண்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு
மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக 10 சிறிய படகுகளும் ஐந்து மருத்துவ
குழுக்களும் வருகை தந்துள்ளன. இவர்கள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து
நிவாரண மற்றும் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
மேலும், இவ்வருகையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக
சீன அரசாங்கத்தினால் அளிக்கப்பட பெருமளவிலான நிவாரணப் பொருட்கள் வைபவ
ரீதியாக கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களிடம்
கையக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொஸ்கம தொடர்பான
செய்திகள் >>>
|