பொதுமண்ணிப்பு காலப்பகுதியில் 11,200
இராணுவ வீரர்கள் சட்டரீதியான சேவைவிலக்குப் பெற விண்ணப்பம்
[2017/11/23]
சட்டரீதியாக சேவைவிலக்கு
பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்ட பொதுமண்ணிப்பு காலம் இம்மாதம் மாதம்
22ஆம்திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. குறித்த பொதுமன்னிப்பு காலத்தைப்
பயன்படுத்தி இலங்கை இராணுவத்திலிருந்து சட்டவிரோதமாக தப்பிச்சென்ற 15
அதிகாரிகள், 09 பயிலுனர் அதிகாரிகள் மற்றும் 11,208 இராணுவ சிப்பாய்கள்
உள்ளிட்ட 11,232 இராணுவ வீரர்கள் சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுக்
கொள்வதற்காக தமது படைத்தலைமையகங்களுக்கு சமூகமளித்தனர்.
உத்தியோக பூர்வ
விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ வீரர்கள், சட்டரீதியான
சேவைவிலக்கு பெற்றுக் கொள்வதற்காக
ஒக்டோபர் மாதம் 23ம் திகதி முதல் நவம்பர் மாதம் 22ம் திகதி வரையிலான ஒரு
மாத கால பொதுமன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டது.
முதலில் பொதுமண்ணிப்புக்
காலம் 15 ஆம் திகதி (நவம்பர்) முடிவடையும் என திட்டமிடப்பட்டிருந்தது,
எனினும் இராணுவத்திற்கு கிடைக்கப்பெற்ற ஏராளமான கோரிக்கைகளுக்கு அமைவாக
குறித்த காலப்பகுதி நவம்பர் மாதம் 22ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது.
குறித்த காலப் பகுதியை
பயன்படுத்தி சட்ட ரீதியாக விலகிச் செல்லாதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட
நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும்
ஆரம்பிக்கப்படவுள்ளது
சட்டவிரோதமாக தப்பிச்சென்ற
வீரர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குதல், அவர்கள் மறைத்து வைத்திருத்தல் என்பன
நாட்டின் சட்டத்தை மீறும் செயல் என்பதுடன் அது குற்றவியல் தண்டனையின் 133
வது பிரிவின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
அனுமதியின்றி நீண்டகால
விடுமுறையிலிருந்து கடமைக்கு சமூகமளிக்காத முப்படை வீரர்களுக்கு
சட்டரீதியாக கடமையிலிருந்து விலகுவதற்காக கடந்த ஆண்டு பாதுகாப்பு
அமைச்சினால் இரு முறைகள் பொதுமன்னிப்புக்காலம் அறிவிக்கப்பட்டு கால அவகாசம்
வழங்கப்பட்டது. அவ்வாண்டு அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப்
பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச் செல்லாத ஒன்பது படைஅதிகாரிகள் மற்றும்
5641 படைவீரர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்திகள் >>
|