வெடித்த மற்றும் வெடிக்கா பொருட்கள் தொடர்பாக மாணவர்களுக்கு
விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் இராணுவத்தினர்
[2016/06/14]
இராணுவத்தினரின் சாலாவ ஆயுத களஞ்சிய சாலையில் இடம்பெற்ற
வெடிப்பு சம்பவத்தின் பின்னர் அப்பகுதியில் சுத்தப்படுத்தல் மற்றும்
மீள்கட்டுமானப் பணிகள் என்பனவற்றில் ஈடுபட்டுவருகின்ற அதேவேளை கொஸ்கம
பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு வெடித்த மற்றும் வெடிக்கா பொருட்கள்
தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகளில் இராணுவத்தினர்
ஈடுபட்டுவருகின்றனர்.
இலங்கை இராணுவத்தின் பொறியியல் படையணியினரால்
மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வுச் செயலமர்வுகளில் சுமேத மகா வித்தியாலயம்,
புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் கலோக்கல புனித யோவான்
வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள்
ஆகியோர் கலந்து கொண்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ் விழிப்புணர்வுச் செயலமர்வுகளில் விரிவுரைகள்,
ஒத்திகைகள், செயல்பாட்டு அமர்வுகள் ஆகியன இடம்பெற்றதுடன் இவ்வாறான வேளைகளில்
எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை முறைகள் தொடர்பாகவும்
கலந்துரையாடப்பட்டன. இதேவேளை கடந்தவாரம் இடம்பெற்ற சாலாவ ஆயுத களஞ்சிய
சாலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் பின்னர் அப்பகுதியில்
சிதறிக்கிடக்கும் வெடித்த மற்றும் வெடிக்கா பொருட்களை அகற்றும்
நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு சிதறிக்கிடக்கும் பொருட்களை ஞாபகார்த்தப்
பொருட்களாக சேகரித்து வைக்கும் மனப்பாங்கு பொதுமக்களிடையே நிலவுகிறது. பொது
மக்களுக்கு சேதம் விளைவிக்கும் இவ்வாறான வெடிபொருட் பாகங்களை சேகரிப்பது தடை
செய்யப் பட்டுள்ளதுடன் இது தொடர்பாக எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான வெடிபொருட் பாகங்கள் காணப்படுமிடத்து அவற்றினை பாதுகாப்பாக
அகற்றுவதற்கு சம்பத்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறியத்தருமாறு பொதுமக்கள்
கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கொஸ்கம சம்பவம் தொடர்பாக அறியத்தர 011 2434 251, 011
3818 609 இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்
கொஸ்கம
தொடர்பான செய்திகள் >>>
கொஸ்கம அரச வைத்தியசாலை புனரமைப்பிற்கு கடற்படையினர் உதவி
|