அடுத்த தேசத்திற்கு மகுடம் கண்காட்சி கிழக்கு மாகாணத்தில்-ஜனாதிபதி
[2012/02/06]
 அடுத்த தேசத்தின் மகுடம் கண்காட்சி கிழக்கு மாகாணத்தில்
நடாத்தப்படவுள்ளதாகவும், கிராமங்களை நவீன மயமாக்கி நகரங்களுடன் இணைப்பதே
அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

200 வீடுகள் முல்லைத்தீவு மக்களிடம் கையளிப்பு
[2012/02/06]
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில்
மீள்குடியேற்றுவதற்காக அரசாங்கம் பல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் யுத்தம் முடிவுக்கொண்டுவரப்பட்ட காலம் தொட்டு கட்டம் கட்டமாக
மக்கள் அவர்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
 இலங்கையின் வளர்ச்சி புகழத்தக்கது-ரஷ்ய ஜனாதிபதி
[2012/02/06]

இலங்கை பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை பாதுகாப்பதில்
குறிப்பிடத்தக்க சாதனையை, எட்டியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி ஏ
மெட்வெடேவ், இலங்கையின் 64ஆவது சுகந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில்
தெரிவித்துள்ளார்
 யாழில் 700 மில்லியன் செலவில் நவீன ஹோட்டல்
[2012/02/06]

யாழ்ப்பாணத்தின் மணிக்கூட்டு கோபுர வீதியில் 700 மில்லியன் செலவில்
அமைக்கப்படவுள்ள நவீன ஹோட்டலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த
பெப்ரவரி 3ஆம் திகதி இடம்பெற்றது.
 64 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை
[2012/02/03]
 இலங்கையின்
64 வது சுதந்திர தினம் நாளை மிகப் பிரமாண்டமான முறையில் கொண்டாடப்படவுள்ளது.
‘ஆச்சரியமான தேசத்தை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப் பொருளில் இம்முறை
நடைபெறவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு உட்பட நாடு
முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 சிறிய நாடுகளை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தண்டிக்கின்றது :
ஜனாதிபதி
[2012/02/03]
ஈரானுக்கு
எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்துள்ள தடைகளின்
தாக்கங்கள் வெளித்தெரிய ஆரம்பித்துள்ளதால் இலங்கை போன்ற சிறிய நாடுகள்
பெரும் கவலையடைந்துள்ளனர் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த புதன் கிழமை
(பெப்.01) வெளிநாட்டு ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

வட பகுதிக்கு முழுமையாக மின்சார வசதி
[2012/02/02]
வட பகுதி மக்களுக்கு நூறு வீதம் முழுமையாக மின்சார வசதி அளிக்கும் நோக்குடன்
735 மில்லியன் ரூபா செலவில் பல மின்சார திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 64வது சுதந்திர தின கொண்டாட்டம் அநுராதபுரத்தில்
[2012/02/02]
இலங்கையின் 64வது சுதந்திர கொண்டாட்டம் இம் முறை அநுராதபுரத்தில் மிகவும்
கோலாகலமாக இடம்பெறவுள்ளதுடன் அதற்கான சகல ஏற்பாடுகளும்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுதந்திர தினத்திற்கான பிரதான வைபவம்
அநுராதபுரத்திலுள்ள ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மாவத்தையில் நாளை மறுதினம் 4ம்
திகதி அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.
 இலங்கை-இந்திய பாதுகாப்புக் கலந்துரையாடல்
[2012/02/01]
இந்து சமுத்திரத்தின் கடல்மார்க்க பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு
சம்பந்தப்பட்ட இலங்கை-இந்திய வருடாந்த பாதுகாப்பு கலந்துரையாடலின் ஆரம்ப
கூட்டம் ஜனவரி 31 ஆம் திகதி இடம்பெற்றது.

240 மில்லியன் ரூபா செலவில் வெள்ளவத்தையில் பொதுச் சந்தை
[2012/02/01]
240 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட கொழும்பு வெள்ளவத்தை பொதுச்
சந்தை நேற்று(ஜன-31) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் உத்தியோக பூர்வமாக
திறந்துவைக்கப்பட்டது.
 2 பில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் வட மாகாண சுகாதார அபிவிருத்தி
[2012/01/31]
சுகாதார அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க, வட மாகாணத்தின் சுகாதார துறையை
அபிவிருத்தி செய்வதற்கென சர்வதேச நிதியம் சுகாதார அமைச்சிற்கு 2 பில்லியன்
ரூபாவை வழங்கியுள்ளது.

சமாதானம் அபிவிருத்திக்கான தேசிய கல்விச் செயற்றிட்டம்
[2012/01/31]
சமாதானம் மற்றும் நிரந்தர அபிவிருத்திக்கான தேசிய கல்விச் செயற்றிட்டம்
நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
 இலங்கை முகம்கொடுக்கும் பிரச்சனைகளை தீர்க்க உள்நாட்டு வழிமுறைகள்
கையாளப்படும்-ஜனாதிபதி
[2012/01/30]
இலங்கை
முகம்கொடுக்கும் அனைத்துப் பிரச்சனைகளை தீர்க்கவும், மக்களின் அபிலாஷைகளையும்,
தேவைகளையும் பூர்த்தி செய்யவும் உள்நாட்டு வழிமுறைகள் கையாளப்படும் என
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ள தேசத்திற்கு மகுடம் 2012
[2012/01/30]
 இலங்கையின்
மிகவும் பிரமாண்டமான தேசத்திற்கு மகுடம் 2012 ஆம் ஆண்டுக்கான கண்காட்சி,
எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள தந்திரிமலை,
ஓயாமடு பிரதேசத்தில் ஆரம்பமாகவுள்ளது.
 தன்னிறைவு மிக்க வறுமையற்ற குடும்பங்களை உருவாக்குவதே இலக்கு
[2012/01/27]
நாட்டில் வாழுகின்ற சகல குடும்பங்களையும் தன்னிறைவு மிக்கதாகவும், சுய
தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளக்கூடியதாகவும் மேம்படுத்தி வறுமையற்ற நாட்டை
உருவாக்குவதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கத்தின்
பிரதான இலக்கு என்று நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளரான கலாநிதி
பி.பி. ஜயசுந்தர தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை நாட்டில் உள்ள விடயங்களை ஆராயவேயன்றி
ஐ.நாவுக்கு சமர்ப்பிப்பதற்காக அல்ல
[2012/01/27]
இலங்கை மற்றும் இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டு
ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

சுற்றுலா வருவாய் ஆரோக்கியமான விகிதத்தில் வளர்ச்சி
[2012/01/27]
2011 ஆண்டுக்கான சுற்றுலாத்துறை வருமானம் 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது,
2011 இல் 44.2 சதவிகிதமாக இருந்ததுடன் ஐக்கிய அமெரிக்க டொலர் 830
மில்லியனாகவுமாக ஒரு ஆரோக்கியமான விகிதத்தில் வளர்ச்சியடைந்திருந்ததாக
மத்திய வங்கி அதன் வெளித்துறை செயல்திறன் விமர்சனத்தில் கடந்த புதன் கிழமை
தெரிவித்தது.
 பாதுகாப்பு சேவைக் கல்லூரிக்கு புதிய கட்டடம்! ஜனாதிபதி
திறந்துவைத்தார்
[2012/01/26]
 பாதுகாப்பு சேவைக் கல்லூரியில் புதிதாக
நிர்மானிக்கப்பட்ட ஐந்து மாடிக்கட்டடத்தை அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அவர்கள் இன்று காலை (ஜன.26) உத்தியோக பூர்வமாக திறந்துவைத்தார்.
 |