முகாம்களில் உள்ளோரின் மீள்குடியமர்வு நிறைவு ;
உறவினருடன் வசிப்போருக்கு அவசர அழைப்பு
[2010/09/02]
வன்னியில் இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் நிறைவடையும்
தறுவாயை எட்டி வரும் நிலையில்,

புதுக்குடியிருப்பில் எல்ரிரிஈயினரின் விமானம் கன்டுபிடிப்பு
[2010/09/02]
எல்ரிரிஈயினரால் பாவிக்கப்ட்டதாக சந்தேகிக்கப்டும் வானூர்தியன்
உதிரிப்பாகங்கள் புதுக்குடியிருப்பு பகுதியில் விமானப்படையின்
உளவுப்பிரிவினர் கன்டுபிடித்துள்ளனர்.

கிழக்கு
மாகாணத்திற்கும் இந்தியாவினால் 10,000 வீடுகள் நிருபமாராவ், முதலமைச்சர்
சந்திப்பில் ஆராய்வு
[2010/09/02]
கிழக்கில் இடம் பெயர்ந்த, மீளக்குடி யமர்த்தப்பட்ட, வீடுகளை இழந்தவர்களுக்
கும் சுமார் 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுக்கும் என கிழக்கு மாகாண
முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நம்பிக்கை வெளியிட்டார்.

இராணுவ முகாம் அமைப்பதற்கு ஒதுக்கிய பொருட்களினால் மீள்குடியேறியருக்கு
வீடு அமைத்து அன்பளிப்பு
[2010/09/01]
வன்னி
கட்டளைத் தளபதியின் கட்டளையின் பேரில் இராணுவ முகாம் அமைப்பதற்க்கு
ஒதுக்கிய சீமந்து மற்றும் மூலப்பொருட்களை ஆகிய வற்றை பாவித்து 5 லெட்சம்
ரூபா பெறுமதியான சகல வசதிகளையும் கொன்ட புதிய வீடு ஒன்றை மன்னார் செட்டியார்
கட்டைப் பகுதியில் அமைத்து அன்பளிப்புச் செய்துள்ளனர்.

வடமாகாண விவசாய அமைச்சு கிளிநொச்சிக்கு இடமாற்றம்
[2010/08/31]
வட மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால் நடைகள், மீன்பிடி
மற்றும் காணி அமைச்சும், அதன் கீழுள்ள சகல திணைக் களங்களும் நாளை (1) முதல்
கிளிநொச்சி நகருக்கு இடமாற்றப்படுகின்றத.

முல்லைத்தீவு மக்களை விரைவில் மீளக் குடியமர்த்துமாறு பசில் பணிப்பு)
[2010/08/31]
வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் எஞ்சியுள்ள
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 8607 குடும்பங்களையும் துரிதமாகக்
குடியமர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள் ளுமாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ
முல்லைத்தீவு அரசாங்க அதிபர் வேதநாயகத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளார.

கிளிநொச்சியில் 54,000 ஏக்கரில் நெற்செய்கை
[2010/08/30]
இவ்வாண்டின் பெரும் போகத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 54,000 ஏக்கரில்
நெற்பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
டன் இதற்கான சகல உதவிகளையும் அரசாங்கம் விவசாயிகளுக்குப் பெற்றுக்
கொடுக்கவுள்ளது.

துறைமுக அதிகார சபை ஏலங்களை கட்டுப்படுத்தி வந்த மாபியா குழுவினர் கைது
[2010/08/30]
துறைமுக அதிகார சபையின் ஏல விற்பனைகளை
கட்டுப்படுத்தியும் பயமுறுத்தியும் வந்த மாபியா குழுவைச் சேர்ந்த நான்கு
பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

5 யாழ் பாடசாலைகள் இசுறு திட்டத்தின் மூலம் புனர்நிர்மானம்
[2010/08/30]
யாழ்பானத்திலுள்ள பிரபல்யமான 5 பாடசாலைகள் தெரிவு
செய்யப்பட்டு இசுறு திட்டத்தின் மூலம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக யாழ்
கல்விவட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன..

வடக்கு கிழக்கில் முன்பள்ளி ஆசிரியருக்கு நம்பிக்கை நிதியம்
[2010/08/30]
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால்
பாதிக்கப்பட்ட முன் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவுகளை வழங்கும்
பொருட்டு ((CHILDREN TRUST FUND) சிறுவர் நம்பிக்கை நிதியம் ஒன்றை
ஸ்தாபிக்க அரசாங்கம் தீர் மானித்துள்ளது.

புனர்வாழ்வு பெற்ற 500 பேர் 4ம் திகதி குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு
[2010/08/30]
புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முன்னாள் புலி
உறுப்பினர்கள் 500 பேர் எதிர்வரும் 04ஆம் திகதி சனிக்கிழமை அவர்களது
குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட விருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப்
பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

கிளிநொச்சியில் யாழ். பல்கலையின் பொறியியல், விவசாய பீடங்கள்
[2010/08/30]
யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தையும் விவசாய
பீடத்தையும் நவீன வசதிகளுடன் கிளிநொச்சியில் விரைவில் நிறுவவுள்ளதாக உயர்
கல்வியமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார்.

வடக்கிலுள்ள பாதைகளை அபிவிருத்தி செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி
[2010/08/29]
அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து
வடக்கிலுள்ள பதைகளை அபிவிருத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இப் பாதைகளை
அபிவிருத்தி செய்ய 173மில்லியன் அமெரிக்க டொளர் செலவாகும் என மதிப்பீடு
செய்யப்பட்டுள்ளது.154.4 மில்லியன் அமெரிக்க நாணயத்தை ஆசிய அபிவிருத்தி
வங்கி வழங்கவுள்ளதுடன் இதன் மீதித் தொகையான 18.6மில்லியனை அரசாங்கம்
வழங்கவுள்ளது.

படிப்பினைகளையும் அனுபவங்களையும் சாதூரியமாக பயன்படுத்தி எமது
எதிர்காலத்தை ஒளிமையமாக்குவதுதான் இன்றய தேவை
[2010/08/29]
இன்று எமது மக்கள் உறவினர்களை இழந்து இருப்பிடங்களை
இழந்து சொத்து சுகங்களை இழந்து பரம்பரை பரம்பரையாக கட்டிக்காத்த
கலாச்சாரத்தை இழந்து இப்படி எல்லாவற்றையும் இழந்து அனாதரவாக இன்று
முகாம்களிலும் குடிசைகளிலும் மரத்தடியிலும் நடை பினமாக வாழ்ந்து வருகின்றனர்.

வன்னி மாவட்ட
பட்டதாரிகள் 30 பேருக்கு நேற்று அரச நியமனம்
[2010/08/28]
வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த 30 பட்டதாரிகளுக்கு நேற்று சிறுவர் நன் னடத்தை
உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கி
வைக்கப்பட்டன.

ஆசியாவிலேயே
வலுவான நாடாக இலங்கை - ஜனாதிபதி
[2010/08/28]
ஆசியாவிலேயே அரசியல் சீரழிவற்ற வலுவான ஸ்திரத்தன்மை மிக்க நாட்டைக்
கட்டியெழுப்பியிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று கொழும்பில்
தெரிவித்தார்.

முன்னாள் போராளிகளுக்கு களுத்துறையில் கைத்தொழில் பயிற்ச்சி
[2010/08/27]
புனர்வாழ்வு
பெற்று வரும் முன்னாள் போராளிகளுக்கு தொழில் பயிற்ச்சியை வழங்கும்
அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் கடந்த புதன் கிழமை களுத்துறை பயாகல
கைத்தொழில் பயிற்ச்சி நிலையத்தில் 60 ட முன்னாள் போராளிகளுக்கு பயிற்ச்சி
நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
[2010/08/26]
இனங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தைப் பொறுத்தவரையில், நாட்டின் தற்போதைய
நிலைமைக்கு சகல அரசியல் கட்சிகளுமே பொறுப்பாளிக ளென்றும் இந்தக் கட்சிகள்
இதற்கான தார்மீக பொறுப்பை ஏற்று வெளிப்படையாகக் கூட்டு மன்னிப்பைக் கோரும்
பட்சத்தில் மக்கள் மத்தியில் நல்லெண்ணம் ஏற்பட பிரதான உந்துதலைக்
கொடுக்குமென்றும் சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளரும்
இராஜதந்திரியுமான ஜயந்த தனபால தெரிவித்தார்.

வடக்கில் 51
ஆயிரம் வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகள் பூர்த்தி முதல் கட்டமாக 1000 வீடுகள்
மூன்று மாதத்துக்குள் கையளிக்கப்டும்
[2010/08/26]
இலங்கையில் கடந்த 30 அண்டுகளாக நடை பெற்ற பயங்கரவாத்தினால் மிகவும்
பாதிக்கப்பட்ட வடமாகான மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றி
அவர்களது பிரதேசங்களில் 51000 வீடுகள் அமைத்துக் கொடுத்து இயல்பு வாழ்கையை
மேன்படுத்துவதற்க்கு தேவையான பல வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளுக்கு கல்விப் பொதுத் தராதர
சாதாரன/ உயர் தர பரிட்சைக்கு தோற்றும் வாய்ப்பு
[2010/08/25]
கடந்த ஆண்டு முடிவுக்குக் கொன்டு வந்த மனிமபிமான
படைநடவடிக்கையின் போது எல்ரிரிஈ இயக்க முன்னாள் உறுப்பினர்கள் கிட்டத்தட்ட
12000 பேர் அரசாங்த்திடம் சரணடைந்தனர்.இவர்களில் 3000 பேர் புனர்வாழ்வு
பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

டயலோக் எக்ஸியேரா றணவிரு இல்ல நிர்மானத்துக்கு 12 மில்லியன் அன்பளிப்பு
[2010/08/25]
மனிதபிமான
படைநடவடிக்கைகளின் போது தமது அவயங்களை இழந்து முற்றாக ஊணமுற்ற
படையினருக்காக பாதுகாப்பு செயலாளரின் என்னக்கருவிலும் அவரது நேரடி
கன்கானிப்பிலும் அத்திடியவில் அமைக்கப் பட்டுவரும் றணவிரு இல்லத்தின்
நிர்மானப் பனிகளுக்கு டயலோக் எக்ஸியேரா நிறுவனம் 12 மில்லியன் ரூபாவை
அன்பளிப்புச் செய்துள்ளது.
வன்னியில் கைவிடப்பட்ட
வாகனங்கள்:
ஆயிரத்துக்கும் அதிகமான உரிமையாளர்கள் அடையாளம
[2010/08/25]
வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கைவிடப்பட்ட
நிலையில் மீட்கப்பட்டிரு க்கும் வாகனங்களுள் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான
வாகனங்களின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட
அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் 13 ஆயிரம் ஏக்கரில் இம்முறை நெற் செய்கை
[2010/08/25]
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அதிக நிலப்பரப்பில்
நெற் செய்கை மேற்கொள்ளப்படுவது எதிர்வரும் பெரும் போகத்தின் போதேயாகும், என
அரசாங்கம் தெரிவித்துள்ளது்.
